சிவகங்கை அருகே வெடிகுண்டு வீசி விவசாயி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருப்புவனம்:
முன்விரோதம் காரணமாக விவசாயி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரும் இப்ராகிம் என்பவரும் டிராக்டர்ஒன்றில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் இருவர் மீதும்நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் முத்துராமலிங்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த இப்ராகிம் மதுரை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தப்பியோடியகொலைக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications