வட்டிப் பணம்: மனைவியுடன் பிரச்சினை- 2 மகள்களைக் கொன்று தந்தையும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கம்பம்:
வட்டிக்குக் கொடுத்த பணம் திரும்பி வராதது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பஸ்ஓட்டுநர், தனது இரண்டு மகள்களைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகஇருந்தார். அவர் அக்கம் பக்கத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார் ராஜகோபால்.
ஆனால் அவரிடம் பணம் வாங்கிய பலரும் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. இதனால் வீட்டில் அவருக்கும்,மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மனமுடைந்த ராஜகோபால், தனது மகள்கள் இருவரையும் தூக்கில் மாட்டிக் கொன்றார். பின்னர் தானும் தற்கொலைசெய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications