மலேசிய கொலைக் குற்றவாளி கோவையில் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
மலேசியாவில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, தமிழகத்திற்குத் தப்பி வந்த இளைஞர் கோவையில் கைதுசெய்யப்பட்டார்.
மலேசியாவைச் சேர்ந்தவர் ரகுநாதன் என்ற விஜய். 25 வயதாங இவர் மலேசியாவில் ஒரு கொலை வழக்கில்கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் சிறையிலிருந்து தப்பிய விஜய் இந்தியாவுக்கு வந்தார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த இவர் கடைசியாக சென்னைக்கு வந்தார். பின்னர், அங்கிருந்துகோவை வந்து, ஊட்டி செல்ல திட்டமிட்டிருந்தார்.
கோவையில் இவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது தான் உண்மை தெரிய வந்தது.இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளினர்.
-->











Click it and Unblock the Notifications