சட்டீஸ்கர் மாநில காங். முதல்வர் மீது சிபிஐ வழக்கு
டெல்லி:
போலியான ஆவணங்களைத் தயாரித்தாக சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் அஜீத் ஜோகி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்க மத்திய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ்பீரோ (ஐ.பி) திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, அதை நிரூபிப்பதற்காக போலி ஆவணங்களை ஜோகி தயாரித்தார்என்று சிபிஐ கூறுகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில்அவர் மீது சிபிஐ இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள்தயாரித்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் இன்டெலிஜென்ஸ் பீரோ மீது ஜோகி ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார். காங்கிரஸ் ஆட்சிசெய்யும் மாநில முதல்வர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு பெயரைக் கெடுக்க முயற்சி நடப்பதாகவும்,தேர்தலை மனதில் வைத்து உளவுப் பிரிவு இந்த வேலையைத் தொடங்கியுள்ளதாகவும், இந்தச் செயலுக்கு பிளாக்சீ என்று இன்டெலிஜென்ஸ் பீரோ பெயரிட்டுள்ளதாகவும் கூறினார்.
எனது மனைவி ரேணு பெங்களூரில் ஒரு மலேசிய நிறுவனத்துடன் இணைந்து சாப்ட்வேர் நிறுவனம்ஆரம்பித்துள்ளதாகவும், நான் சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ளதாகவும் பொய்யானகுற்றச்சாட்டுகளைக் கிளப்பி என் பெயரைக் கெடுக்கவே இந்த பிளாக் சீ திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.
அது தொடர்பாக சில ஆவணங்களையும் பத்திரிக்கைகளுக்குத் தந்தார். இதை பிரதமர் வாஜ்பாய்க்கும் அனுப்பிவைத்தார்.
இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு வாஜ்பாய் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜோகியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதை விசாரித்து வந்த சிபிஐ இப்போது ஜோகி மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பொய்யானதகவலைக் கூறி ஐ.பியின் பெயரைக் கெடுக்க முயன்றதாகவும் இதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்தாகவும்ஜோகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தான் சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதிகளைதேர்தல் கமிஷ்னர் லிங்டோ அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுவுடன் தங்கள் மீதானகிரிமினல் வழக்கு விவரங்களையும், சொத்துப் பட்டியயும் சேர்த்தே தாக்கல் செய்ய வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
வழக்குகள் தீவிரமாக இருந்தால் அவர்களை போட்டியிட விடாமல் தேர்தல் கமிஷன் தடுக்கும். இந் நிலையில்காங்கிரஸ் முதல்வர் அஜீத் ஜோகி மீது இந்த வழக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.