பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு
சென்னை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துகளின் தலைவர் பதவிக்கும், பல ஊராட்சி அமைப்புகளுக்கு இன்றுதேர்தல் நடக்கிறது. காலை முதல் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல்அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலில் இரண்டில் மட்டுமே தலித்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மற்றஇரண்டிலும் உயர் ஜாதியினரின் மிரட்டலால் போட்டியிடவே தலித்கள் முன் வரவில்லை,
வேட்பு மனுக்கள் தாக்கலான பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளிலும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய இரண்டுதலித் பஞ்சாயத்துக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மேலும் அதிரடிப்படையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு வெற்றி பெறும் தலித் வேட்பாளர்கள் தலைவர்களாக பதவியேற்றாலும் அதில் நீடிப்பது சந்தேகமே. கடந்தமுறையைப் போல உடனே பதவியை விட்டும் அவர்கள் விலகிவிடுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications