நக்கீரன் கோபாலின் காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலின் சிறைக் காவல் அக்டோபர் 31ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொடா சட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் அவருக்கு பொடாநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இருப்பினும் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்து விட்டது. இதையடுத்து கோபால் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
அவரது சிறைக் காவல் 180 நாட்களை எட்டியதையொட்டி கோபால் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்குக்கொண்டு வரப்பட்டார்.
அரசு வக்கீல் ஜெயக்குமார், நீதிபதி ராஜேந்திரனிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,
கோபாலின் சிறைக் காவல் 180 நாட்களை தாண்டி விட்டது. பொடா விதிறைகளின்படி 180 நாட்களுக்குள்,குற்றவாளி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுத் தரப்பு விசாரணை முடிவடைந்போதும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளஉத்தரவுப்படி அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கோபால் மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 27 ம் தேதி நடக்கவுள்ளது. எனவே கோபாலின் சிறைக் காவலைநீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அப்போது கோபாலின் வக்கீல் இளங்கோ குறுக்கிட்டு, அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் வேறு சில வழக்குகள்தொடர்பாக கோபால் ஆஜராக வேண்டியுள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ராஜேந்திரன், வழக்கை அக்டோபர் 31ம் தேதிக்குஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications