கலாம் இன்றிரவு சென்னை வருகை: கமாண்டோக்கள் குவிப்பு
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று சென்னை வருகிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது தாக்குதல்நடந்ததைத் தொடர்ந்து கலாமுக்கும் மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
நேற்றே 4 குண்டு துளைக்காத கார்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. அதே போல 25க்கும் மேற்பட்ட கமாண்டோக்களும் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர்.
2 நாட்கள் சென்னையில் தங்கியிருக்கும் கலாம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தை நாட்டுக்குஅர்ப்பணித்து வைக்கிறார். இன்று இரவு 10.10 மணிக்கு சென்னை வந்து சேரும் குடியரசுத் தலைவர், நேராகஆளுநர் மாளிகைக்குச் சென்று தங்குகிறார்.
நாளை காலை 9.20 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். அங்குள்ள ராக்கெட்ஏவுதளத்தைப் பார்வையிட்ட பின்னர் விஞ்ஞானிகளையும் சந்திக்கிறார். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் தொடர்பாகவிஞ்ஞானிகளுக்கு அவர் யோசனைகள் வழங்குவார் என்று தெரிகிறது.
பின்னர் மாலை 3.30 மணியளவில் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் வரும் கலாம், அங்குள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
மாலை 5.30 மணியளவில் மியூசிக் அகாடமியில் நடக்கும் சங்கர நேத்ராலயாவின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளைத்துவக்கி வைத்த பின் இரவு 7 மணிக்கு டெல்லி திரும்புகிறார்.