புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் கொள்ளையனைப் பிடித்து ரூ. 1 லட்சத்தை மீட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் ரூ. 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்த இரண்டு மணி நேரத்தில்,திருடனைப் பிடித்த போலீசார் பணத்தையும் மீட்டனர்.

மதுரை கோரிப்பாளையம், சின்னக் கண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி. இவர் குடும்பத்துடன்ஊருக்குப் போய் விட்டு இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு உள்ளேவைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உடனே தல்லாகுளம் காவல் நிலையத்தில் முத்துப் பாண்டி புகார் கொடுத்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கி முத்துப் பாண்டி வசித்து வரும் அதேதெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரைப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, பணத்தைக்கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து கனகராஜை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து முழுப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

புகார் கொடுத்த 2 மணி நேரத்தில், விசாரணை முடிந்து, கொள்ளையனும் பிடிபட்டு, பணமும் திரும்பி வந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+