For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்சல்கள் தமிழகத்தில் ஊடுருவல்: சென்னையில் ஆந்திர போலீஸ் படை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கண்ணி வெடி வைத்துத் தாக்கிய நக்சலைட்டுகள், தமிழகத்திற்குள்ஊடுருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து விசாரிக்க ஆந்திர போலீஸார் தமிழகம் வந்துள்ளனர்.

திருப்பதி அருகே மலைப் பாதையில் வைக்கப்பட்ட கண்ணி வெடியில் சிக்கிய சந்திரபாபு நாயுடு காயமடைந்தார்.இரண்டு எம்.எல்.ஏக்கள் படுகாயமடைந்தனர். மக்கள் போர்க்குழு நக்சலைட் அமைப்புதான் இந்தத் தாக்குதலைநடத்தியது.

கண்ணிவெடி வைத்த நக்சலைட்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவியிருப்பதாக ஆந்திர போலீஸாருக்கு தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து ஆந்திராவிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

இங்கு தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பெரம்பலூர், தர்மபுரி, சேலம்ஆகிய நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் இரு மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டைநடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மெத்தனம்: காங்.புகார்

இதற்கிடையே தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மத்திய பாரதீய ஜனதா ஆட்சி மிகவும் மெத்தனமாக உள்ளதாகஅகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சத்யஜித் கெய்க்வாட் குற்றம் சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் மத்தியஅமைச்சர் கண்ணப்பன் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது.

விடுதலைப் புலிகள் விவகாரம் என்றில்லை, வட கிழக்கு தீவிரவாதம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கும் பா.ஜ.க.அரசே காரணம்.

பா.ஜ.க. அரசு எடுக்கும் எந்த முடிவும் நாட்டுக்கு ஆபத்தாகவே முடிகிறது. நக்சலைட்டுகளை ஒடுக்குவதிலும் மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு சரிவர ஒத்துழைப்பதில்லை என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X