போலீஸிடமிருந்து தப்ப ஆற்றில் குதித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தபோது, போலீஸ் வந்ததால் அவர்களிடமிருந்து தப்புவதற்காக பாண்டிச்சேரிசாரங்கபாணி ஆற்றில் குதித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூரைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குத் தீபாவளிக்காகவந்திருந்தார். வில்லியனூர் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த உறவினர் வெங்கடேசன், வீரமணி மற்றும் சிலர்சாரங்கபாணி ஆற்றங்கரையில் அமர்ந்து சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் அங்கு வந்தனர்.
இதையடுத்து போலீஸிடமிருந்து தப்புவதற்காக வீரமணியும், வெங்கடேசனும் ஆற்றில் குதித்தனர்.ஆனால் ஆற்றுநீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications