கருணாநிதியிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் சிபிசிஐடிபோலீஸார் விசாரணை நடத்தினர்.
| கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொண்ட சமரசமுயற்சிகளின்போது ஏராளமான பணம் கைமாறியதாக முன்னாள் கர்நாடக போலீஸ் டிஜிபி தினகர் தான் எழுதியபுத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். கருணாநிதி வீட்டில் வைத்துத்தான் கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாக அவர்கூறியிருந்தார். |
இந் நிலையில் இந்த விசாரணை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் நேற்றுமாலை சென்றனர். இரண்டு சிபிசிஐடி அதிகாரிகள், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் அவரை சந்தித்துவிசாரணை நடத்தினர்.
அவர்கள் சென்ற பின்னர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
சிபிசிஐடி கண்காணிப்பாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணைக்காக வந்திருந்தனர். ராஜ்குமார்கடத்தலின்போது அவரை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்துக் கேட்டனர்.
ராஜ்குமார் கடத்தலின்போது தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் குறித்துத்தெரிவித்தேன். வீரப்பனால் யாராவது கடத்தப்பட்டால் இரு மாநில அரசுகளும் இணைந்து மீட்பு நடவடிக்கையில்ஈடுபடுவது வழக்கம் என்று தெரிவித்தேன்.
அதேபோல, கடந்த அதிமுக காலத்தில் வீரப்பனால் கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி சிதம்பரநாதனை மீட்கஅப்போதைய ஜெயலலிதா அரசு மேற்கொண்ட முயற்சிகள், வீரப்பனின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டுஜெயலலிதா அரசு பிறப்பித்த உத்தரவுகள் ஆகியவற்றையும் அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.
அதே போலத்தான் எனது அரசும் செயல்பட்டது என்பதை அவர்களுக்கு நினைவூட்டி அனுப்பி வைத்தேன் என்றார்கருணாநிதி.
இதற்கிடையே கருணாநிதியின் வீட்டுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வந்ததையடுத்து அவர் கைதாகப் போவதாக புரளிகிளம்பியது. இதையடுத்து ஏராளமான திமுக தொண்டர்கள் கோபாலபுரம் வீட்டு முன்பாக திரண்டிருந்தனர்.