For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் கோபம்: அய்யருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காங்கிரஸ் எம்.பியும், பத்திரிக்கை காலம்னிஸ்டுமான மணி சங்கர அய்யர் மீதான தாக்குதலை மத்திய அரசுதீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

இது குறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதோடு அவருக்குஉரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதைடுத்து மத்திய உள்துறைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச்செயலாளர் சையத் முனீர் ஹோதா, மற்றும் காவல்துறை டிஜிபி கோவிந்த் ஆகியோரைத் தொடர்பு கொண்டுபேசியுள்ளார்.

அய்யருக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

அய்யர் விரும்பினால் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.ஆனால், அந்தப் பாதுகாப்புத் தேவையில்லை என அய்யர் தெரிவித்துவிட்டார்.

எனக்கு பாதுகாப்பு தர வேண்டியது மாநில அரசின் பொறுப்பு, அதை ஜெயலலிதா அரசு செய்யும் என்றுநம்புகிறேன் என்றார் அய்யர்.

இதற்கிடையே அய்யர் மீதான அதிமுகவினரில் தாக்குதலால் காங்கிரஸ் கட்சித் தலைமை கடும்எரிச்சலடைந்துள்ளது. தேவைப்பட்டால் பிரதமர் வாஜ்பாயுடன் இது தொடர்பாக சோனியா காந்தி பேசுவார் என்றுகாங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X