For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தா.கி. வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குஅழகிரியின் ஆதரவாளர்கள்தான் காரணம் என்று கூறிய போலீஸார் அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைதுசெய்தனர்.

அவர்கள் மீது மதுரை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்அழகிரி உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் 13 பேருக்கும்குற்றப்பத்திரிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று 13 பேரும் நீதிபதி வனிதா முன்பு ஆஜராகினர். அப்போது அனைவரிடமும்குற்றப்பத்திரிக்கை நகல்களைப் பெற்றுக் கொண்டீர்களா என்று நீதிபதி கேட்டார்.

பின்னர், வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று கூறி வழக்கைசெஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.

வரும் 29ம் தேதி அனைவரும் விசாரணைக்காக செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X