வைகோவின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காவலை அக்டோபர் 21ம் தேதி வரை நீட்டித்து பொடா நீதிமன்றநீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதும் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை பி.எஸ்.மணியம் என்பவரைத் தவிர மற்ற 8 பேரும் வேலூர் சிறையிலிருந்து, பூந்தமல்லிபொடா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அப்போது திருமங்கலம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம், வைகோ தரப்பு வக்கீல் தினகரன்குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கு 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications