For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது தலைமைச் செயலகம்: 30ம் தேதி பூமி பூஜை- - ஜெ., சங்கராச்சாரியார் பங்கேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய தலைமைச் செயலகத்திற்கு வருகிற 30ம் தேதி பூமி பூஜை நடத்தப்படவுள்ளது. இதில் முதல்வர்ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 42.03 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைமைச் செயலகம்கட்டப்படவுள்ளது. பூமி பூஜையில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார்ஜெயேந்திரரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைகழகத்திற்குச் சொந்தமான 22.16 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு எடுத்துக் கொள்வதால்,பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள, அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சிநிலைய நிலம் 38 ஏக்கரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசு வழங்குகிறது.

இந்த இடத்தில் அண்ணா ஜெம் மேல்நிலைப்பள்ளி, 1200 மாணவர்கள் தங்கும் வசதியுள்ள இரு விடுதிகள்,பொருளியல் தகவல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை அரசே தன் செலவில் கட்டித் தரவுள்ளது.அந்த பணிகள் டிசம்பருக்குள் துவக்கப்படும்.

அதேபோல, பெருங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை அரசுஎடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X