தஞ்சையில் இடிதாக்கி 5 பேர் பலி
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூரில் இடி தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர்.பள்ளி மைதானத்திலும் இடி விழுந்தது. 1000 மாணவ மாணவியர் தப்பினர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில்,தஞ்சை திருவாரூரில் நேற்று முன்தினமும் சுமார் 3 மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தஞ்சை மாவட்டம் குடந்தை அருகிலுள்ள இன்னம்பூரைச் சேர்ந்த சம்பத்தத்தின் மனைவி மாலதி. இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.மாலதி நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்த இடி மாலதியைத் தாக்கியதில் அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார்.
இதேபோல் தஞ்சை ஒரத்தநாடு அருகே பூவத்தூரைச் சேர்ந்த லலிதா, லட்சுமி, சரோஜா மற்றும் சிலரையும் நேற்றுஇடி தாக்கியது. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லலிதா இறந்தார். லட்சுமியும் சரோஜாவும் அதிர்ச்சியில்மயக்கமடைந்தனர்.
மேலும் அங்கு இடியால் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டுள்ளனர். அங்கு சிகிச்சைபலனளிக்காமல் கோவிந்தராஜ் என்பவர் இறந்தார். மேலும் பொட்டலங்குடிகாட்டை சேர்ந்த வில்லுச்சாமியும் புல்அறுத்துக் கொண்டிருக்கும் போது இடி தாக்கி இறந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூரை சேர்ந்த ராஜா மற்றும் 7 பேர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது விழுந்த இடியில் ராஜா கருகி இறந்தார். மற்ற 7 பேரும் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கணபதி அக்ரஹாரம் , கபிஸ்தலம் போன்றஊர்களிலும் நல்ல மழை பெய்தது. அப்போது பயங்கரமாக இடி இடித்தது. அந்த இடி பாபநாசம் ஒன்றியநடுநிலைப்பள்ளியிலுள்ள தூங்குமூஞ்சி மரத்தைத் தாக்கி மரம் கருகி விட்டது.
இடி பள்ளி வகுப்பறைகளிலிருந்து 15 கி.மீ. தொலைவில் விழுந்ததால் அங்கு படிக்கும் 1000 மாணவ மாணவியர்உயிர் தப்பினர். மாணவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரம் ஆனது.












Click it and Unblock the Notifications