10 நாளில் மயிலை - திருவான்மியூர் மின் ரயில் போக்குவரத்து தொடக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூர் மற்றும் திருவான்மியூர் இடையிலான மாடி ரயில் போக்குவரத்து இன்னும் 10 நாட்களில்தொடங்கும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த ரயில்வே விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிய அவர் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில், மயிலாப்பூருக்கும், திருவான்மியூருக்கும் இடையிலான மாடி ரயில் பாதைதயாராகி விட்டது.
இன்னும் ஒரு வாரம், பத்து நாட்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்து விடும் என்றுஉறுதியாக நம்புகிறோம். அனுமதி கிடைத்தவுடன் ரயில் போக்குவரத்து தொடங்கும்.
திருவான்மியூர் - வேளச்சேரி இடையிலான பாதை அமைக்கும் பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அது முடிந்ததும் அப்பாதை சீர் செய்யப்பட்டு விரைவாக பணிகள்மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications