வரதட்சணைக்கு எதிராக களம் இறங்கும் கம்யூனிஸ்ட்
சென்னை:
வரதட்சணைக் கொடுமை குறித்த விழிப்புணர்வு மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில்நடத்துகிறது.
இது குறித்து கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2002 ஆகஸ்ட் வரை தமிழகத்தில் 174 வரதட்சணைக் கொடுமைதொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வரதட்சணையால் ஏற்பட்ட கொலை வழக்குகளும்அடங்கும். கடந்த ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 157 ஆகும்.
மதுரை, சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவில்வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகின்றன.
வரதட்சணைத் தடுப்புச்சட்டத்தால் இந்தக் கொடுமையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிரானஇந்த வன்முறை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்றார்.
வரதட்சணை கொடுமை காரணமாக இதுவரை 13,612 பேர் இறந்துள்ளதாகவும், இதில் 6699 வழக்குகளில்இன்னும் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் துணைத் தலைவர்மைதிலி சிவராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications