சென்னை கடலில் மூழ்கி பெங்களூரை சேர்ந்த தந்தை, மகன் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற 2 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்
பெங்களூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார்.அவரும், அவரது 16 வயது மகனும் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு கடலில் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அலைகள் வேகமாக இருந்ததால் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். சீனிவாசனின் உடல்உடனடியாக மீட்கப்பட்டது. அவரது மகனின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.
அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications