கின்னஸ் சாதனை படைத்தார் சிவாந்தி
லண்டன்:
தொடர்ந்து 111 மணி நேரம் 45 நிமிடங்கள் வானொலியில் பேசி கின்னஸ் உலக சாதனை படைத்துவிட்டார்ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டு தாபனத்தின் (ETBC) அறிவிப்பாளர் சிவாந்தி.
முன்னதாக அவர் 123 மணி நேரம் பேசிட திட்டமிட்டிருந்தார். ஆனால், தனது உடல் நிலை ஒத்துழைக்காததால் 111மணி 45 நிமிடங்களுடன் தனது கின்னஸ் சாதனை முயற்சியை முடித்துக் கொண்டார்.
இதற்கு முன் அதிக நேரம் வானொலியில் பேசி கின்னஸ் சாதனை படைத்தவர் சுவிஸ் நாட்டுக்காரர் ஆவர். அவர்103 மணி நேரம் 30 நிமிடங்கள் தொடர்ந்து அறிவிப்புகள் செய்து சாதனை படைத்தார்.
இந் நிலையில் 104வது மணி நேரத்தை எட்டியபோதே சிவாந்தியின் உடல் நிலை மிகவும் தளர்ந்தது. இதையடுத்துமிகவும் சிரமத்துடன் அடுத்த 7 மணி நேரம் பேசினார். 111 மணி 45 நிமிடங்களைக் கடந்த நிலையில், தனதுமுயற்சியை கைவிட அவர் தீர்மானித்தார்.
இந்த சாதனை மூலம் ஒலிபரப்புத் துறையில் உலகில் கின்னஸ் சாதனை படைத்த முதல் தமிழ் பெண் என்றபெருமையை எட்டிப் பிடித்துள்ளார் சிவாந்தி.
இத்தோடு நில்லாமல், அடுத்த முயற்சியாக தொடர்ந்து 3 நாட்கள் பரதநாட்டியம் ஆடி சாதனை படைக்க சிவாந்திதிட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications