தமிழக அரசு தொடர்ந்து அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: உடனே அப்பீல்
சென்னை:
ஜூனியன் விகடன் பத்திரிக்கை ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 3 பேர் மீது தமிழக அரசு தொடர்ந்தஅவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அதை எதிர்த்து அரசு தரப்பில, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி வாடி வருவதாகவும், நத்தைகளை சுட்டுத்தின்னும் அவல நிலையில் இருப்பதாகவும் ஜூனியர் விகடன் கட்டுரை வெளியிடப்பட்டது.
இந்த செய்தி, தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவமதிப்பு தேடித் தருவதாக உள்ளதாக கூறிபத்திரிக்கை ஆசிரியர் பாலசுப்ரமணியன், நிருபர்கள் லோகநாதன், சரவணன் ஆகியோர் மீது சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபால், ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை முதல்வரையோ அல்லதுதமிழக அரசையோ அவமதிக்கும் வகையில் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து அரசுத் தரப்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முதல்வர்ஜெயலலிதாவுக்கு எதிராக கட்டுரையில் கூறப்பட்டிருந்தவற்றைக் கவனிக்க செஷன்ஸ் நீதிமன்றம் தவறி விட்டது.
முதல்வருக்கு எதிராகவும், அவரையும், அவரது பணியையும், கடமையையும் அவமதிக்கும் வகையில் கட்டுரையில்கூறப்பட்டுள்ளவற்றைக் கூட செஷன்ஸ் நீதிமன்றம் கவனிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி சொக்கலிங்கம், 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில், விகடன் ஆசிரிய ர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய உத்தரவிட்டார் சபாநாயகராகஇருந்த பி.எச். பாண்டியன். அந்த வழக்கில் ஆசிரியரை விடுவித்தது நீதிமன்றம். மேலும் தமிழக அரசு இதற்காகஅபராதமும் கட்டியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications