திருச்செந்தூர், ஆஸ்திரேலியாவில் கோலாகலம்
திருச்செந்தூர் & சிட்னி:
செந்தில்நாதன் அரசாளும் திருச்செந்தூர் கடலோரத்தில் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹாரநிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடந்தேறியது.
முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. அதில் முக்கியநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.
திருச்செந்தூர் கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில், மாலை 4 மணியளவில் அசுரன்சூரபத்மனை, முருகப் பெருமான் வதம் செய்த காட்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
பறவை, காகம் என பலவித உருவங்களில் வந்த பத்மனை, முருகப் பெருமான் வதம் செய்தபோது, அரோகராகோஷம் விண்ணைப் பிளந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி வியாழக்கிழமை காலை முதலே பல்வேறுபூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன.
சூரசம்ஹார நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர்பி.சி.ராமசாமி உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.
கந்தசஷ்டி விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான முருகன், தெய்வானை திருமணம் வெள்ளிக்கிழமை இரவுநடக்கிறது.
தமிழகத்திழன் பல்வேறு இடங்களிலுமுள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் வெகு சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
மேலும் உலகம் முழுவதிலும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களிலும் இந்நிகழ்ச்சி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சிட்னியில்...
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மேஷில் என்ற இடத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலிலும் சூரசம்ஹாரம்கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுசிறப்பித்தார்கள்.












Click it and Unblock the Notifications