வைகோ விவகாரம்: மத்திய அரசு மீது கருணாநிதி அதிருப்தி
சென்னை:
வைகோ விடுதலை தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் அதிருப்தி தருவதாக உள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டமே வேண்டாம் என்று திமுக கூறி வருகிறது.ஆனால் மத்திய அரசு பொடா சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இது பூசி மொழுகும் வேலையேதவிர வேறொன்றும் இல்லை. மத்திய அரசின் செயல் எங்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
வைகோவை விடுதலை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. பொடாசட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதை டிசம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள மறியல் அறப்போரின்போதுவலியுறுத்தவுள்ளோம்.
பொடாவில் இருந்து தப்பி வைகோ உயிரோடு வெளியே வருவாரா என்பதே சந்தேகமாக உள்ளது. மனிதசுதந்திரத்துக்குகே இங்கே இடமில்லாமல் போய்விட்டது. புதிய தலைமைச் செயலகம் குறித்து மக்கள் மன்றத்தில்எடுத்துச் சொல்வோம், நீதிமன்றத்தை அணுக மாட்டோம். அத்வானி சென்னை வந்தது குறித்து எனக்கு எதுவும்தெரியாது என்றார்.
ஜனா கிருஷ்ணமூர்த்திக்கும் கருணாநிதிக்கும் ஒத்து வராது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக் கட்சியாகஇருந்தாலும் தனது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கருணாநிதியை அவர் அழைப்பதும் இல்லை. இதனால் தான் அவரதுமகள் திருமண நிகழ்ச்சிக்கு அத்வானி வந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கருணாநிதி பதிலளித்தார்.