அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்: கருணாநிதி மீது குற்றப் பத்திரிக்கை
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டி விட்டதாக கூறித் தொடரப்பட்டுள்ள வழக்கில் திமுக தலைவர்கருணாநிதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் வரதராஜன்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் மீது போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், அறிக்கைகள் விட்டதாகவும் கூறிஇந்தத் தலைவர்கள் மீது தமிழக அரசு டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் குற்றப்ப த்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். டெஸ்மாசட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத்தூண்டியதோடு, அரசு நிர்வாகம் முடங்கிப் போகவும் இவர்கள் உதவினர் என்று குற்றப் பத்திரிக்கையில்கூறப்பட்டுள்ளது.
எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.