ஆசிரியை திட்டியதால் 4-வது வகுப்பு மாணவி தீக்குளிப்பு
கோவை:
கோவையில், ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த 4-வது வகுப்பு மாணவி மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். பலத்த காயமடைந்த அச்சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித் தொழிலாளியான இவரது மகள் கிருத்திகா,அருகே உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 4-வது வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி கிருத்திகா, ஆசிரியை மரகதம் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,பாடத்தைக் கவனிக்காமல் அருகில் இருந்த மாணவிகளுடன் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து ஆசிரியை,கிருத்திகாவைத் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி கிருத்திகா, மாலையில் வீட்டிற்கு வந்ததும், மண்ணெண்ணைய் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை, அக்கம் பக்கத்தினர் அரசுப் பொது மருத்துவமனைக்குக்கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு கிருத்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.