பெண்ணைக் கொன்று 60 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தனியாக இருந்த பெண்மணியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதிருடர்கள் ரூ. 1 லட்சம் பணத்தையும்,60 பவுன் நிகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
சாத்தூர் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி வத்சலா. இவர்களது மகளுக்குத்திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
இந் நிலையில் வீட்டில் வத்சலா மட்டும் இருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர்கள், வத்சலாவை இரும்புக்கம்பியால் பலமாகத் தாக்கினர்.இதில் வத்சலா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சம் பணம், 60 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டுதப்பினர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications