கல்லூரி முதல்வர் அறையை அடித்து நொறுக்கிய சட்ட மாணவர்கள்
பாண்டிச்சேரி:
புதுவையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயற்சித்ததால்ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்து விட்டு கல்லூரி முதல்வரின் அறையை அடித்துநொறுக்கினர்.
புதுவையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 2-வது ஆண்டு படித்து வருபவர் சுரேஷ். இவரது வருகைப்பதிவேடு திருப்திகரமாக இல்லாததால், அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து கல்லூரி முதல்வரின் அறைக்குச் சென்ற சுரேஷ், தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறுவற்புறுத்தியுள்ளார். ஆனால் முதல்வர் அனுமதி தரவில்லை. இதையடுத்து கையில் வைத்திருந்த தூக்கமாத்திரைகளை விழுங்கினார். உடனடியாக அவரை ஆசிரியர்களும், மாணவர்களும் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்று சேர்த்தனர்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்வு தொடங்கியது. ஆனால் தேர்வு எழுதாமல் புறக்கணித்த மாணவர்கள்கல்லூரி முதல்வரின் அறை முன்பு வந்து கோஷமிட்டனர். பின்னர் முதல்வரின் அறைக்குள் புகுந்து அடித்துநொறுக்கினர். அப்போது முதல்வர் அங்கு இல்லை.
கடந்த ஆண்டு, இதே கல்லூரியில் படித்து வந்த ஒரு மாணவர் தன்னை தேர்வு எழுத அனுமதிக்காததைக் கண்டித்துஉயரமான கோபுரத்தின் மீது ஏறி நின்று தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications