தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம்
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியும், இறந்துபோன மற்றும் வேறு இடத்திற்குக் குடிபோன வாக்காளர்களின் பெயர்களைத் திருத்தி அமைக்கும் பணியும் நாளைதொடங்குகிறது. இந்தப் பணி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறும்.
வரும் டிசம்பர் 1ம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிய வாக்காளர்களாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
புதிய வாக்காளர்களைச் சேர்க்க 66 லட்சம் படிவங்களும், பட்டியல் திருத்தப் பணிக்காக 11 லட்சம் படிவங்களும்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை இலவசமாகவே வழங்கப்படும்.
கிராம நிர்வாக சபைக் கூட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியரல் வாசிக்கப்படும். அதில் தங்கள் பெயர் இடம்பெறாதவர்கள் படிவங்களை வாங்கிப் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலகரிடம் கொடுக்கவேண்டும்.
அதேபோல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டத்திலும்வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
திருத்தப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்படும். இப் பணிகள்மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை.பல லட்சம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுதமிழகத்தில் 4.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தவறான தகவல் கொடுத்து பெயர் பதிவு செய்வது, 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 31ன் படிதண்டனைக்குரிய குற்றமாகும்.












Click it and Unblock the Notifications