ஆயிரம் விளக்கை அலற வைத்த வெள்ளை ஆந்தை!
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உலா வந்த வெள்ளை ஆந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
சென்னையின் மிக முக்கியமான ஆயிரம் விளக்குப் பகுதியில் இன்று காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதியில் உள்ள உயரமான கட்டடம் ஒன்றின் மீது வெள்ளை நிறத்தில் காணப்பட்ட புதிய வகை ஆந்தையேஇந்த பரபரப்புக்குக் காரணம்.வித்தியாசமான இந்த ஆந்தையைக் காண அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர். இதனால் அங்குபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளை ஆந்தை விஷயம், தீயணைப்புப் படையினருக்குப் போனது. அவர்கள்விரைந்து வந்து வெள்ளை ஆந்தையை பத்திரமாகப் பிடித்தனர்.இந்த வகை ஆந்தைகள், வெளிநாடுகளில்தான் வழக்கமாக காணப்படும் என்றும், ஆயிரம் விளக்குப் பகுதிக்குவந்த ஆந்தை, வழி மாறி வந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆந்தை எந்த நாட்டிலிருந்து வந்ததுஎன்பது குறித்து விலங்கியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.இந்த ஆந்தை தற்போது புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications