For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுபான மேற்பார்வையாளர் வேலை: பட்டதாரி இளைஞர்களிடம் ஆர்வம் இல்லை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் நிறுவனம் நடத்தவுள்ள மதுபானக் கடைகளில் மேற்பார்வையாளர்பதவியில் சேர சொற்ப எண்ணிக்கையிலான பட்டதாரி இளைஞர்களே வந்ததால் தேர்வு மையங்கள்வெறிச்சோடின.

வருகிற டிசம்பர் மாதம் முதல், தனியார் சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை மூடி விட்டு தமிழக அரசேதனது கூட்டுறவு வாணிபக் கழகமான டாஸ்மார்க் மூலம் மது விற்பனையை மேற்கொள்ளவுள்ளது.

இங்கு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றுவதற்காக பட்டதாரிகளை தேர்வு செய்யும் பணி நேற்று முதல்நடந்து வருகிறது. ஆனால், மாதம் ரூ. 2,000 மட்டுமே சம்பளம் மற்றும் ரூ. 50,000 டெபாசிட் செலுத்த வேண்டும்என அரசு நிபந்தனை விதித்துள்ளதால் இதில் சேர இளைஞர்களிடையே ஆர்வம் இல்லை.

சென்னையில் ஆள் தேர்வு நடைபெறும் அண்ணா நகர், ஆழ்வார்ப்பேட்டை, அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்டமையங்களில் ஆட்களே வரவில்லை. ஓரிரண்டு பேரே வந்திருந்தனர். அவர்களும், டெபாசிட் தொகையைக் கட்டமுடியாது என்று கூறி விட்டுச் சென்று விட்டனர்.

இதேபோல, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் இளைஞர்கள் கூட்டம் இல்லை.

அதே நேரத்தில் விற்பனையாளர்கள் பதவியில் சேர ஓரளவுக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் இளைஞர்கள். இந்தப்பதசவிக்கு ரூ. 15,000 டெபாசிட் கட்ட வேண்டும். மாத ஊதியம் ரூ. 750 ஆகும். இந்த வேலையில் சேர சிலபகுதிகளில் பெண்களும் ஆர்வம் காட்டினர். ஆனால், பெண்களுக்கு மதுக்கடை வேலையில்லை என்று திருப்பிஅனுப்பப்பட்டுவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X