சேலம் சிறைச்சாலையில் ஜான்பாண்டியன்-வெல்டிங் குமார் அடிதடி!
சேலம்:
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவேந்திர குல வேளாளர் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன்மற்றும் பிரபல ரவுடி வெல்டிங் குமார் ஆகியோர் பயங்கரமாக மோதிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மத்திய சிறையில் வெல்டிங் குமார் அடைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த சிறைக்குக்கொண்டு வரப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தனை வெல்டிங் குமார் மற்றும் அவனது ஆட்கள்சேர்ந்து பிளேடுகளால் தாக்கி கொலை செய்ய முயன்றது நினைவிருக்கலாம்.
சேலம் சிறையில் ஜான் பாண்டியனும் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் வழக்கு ஒன்றிற்காக மும்பைக்குஅழைத்துச் செல்லப்பட்ட ஜான் பாண்டியன் சேலம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
மும்பையில் தன்னைச் சந்தித்தவர்களிடமிருந்து வெளிநாட்டுச் சாக்லேட்டுகளைப் பெற்று வந்த ஜான் பாண்டியன்அதை சிறைக்குள் வைத்திருந்தார்.
அப்போது, ஜான் பாண்டியனிடம் கேட்காமல், வெல்டிங் குமார் சில சாக்லேட்டுகளை எடுத்துச் சாப்பிட்டுவிட்டதாகத் தெகிறது. இதை ஜான் பாண்டியன் கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேமோதல் ஏற்பட்டு இருவரும் கட்டிப் புரண்டனர்.
தகவல் அறிந்ததும் வார்டர்கள் மற்றும் சிறை போலீஸார் விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர்.தற்போது இருவரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.