For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரிக்கு 4 நாட்கள் ஜாமீன் நிபந்தனை தளர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முரசொலி மாறன் இறுதிச் சடங்கு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, திமுக தலைவர்கருணாநிதியின் மகன் அழகிரியின் ஜாமீன் நிபந்தனை நான்கு நாட்களுக்கு தளர்த்தப்பட்டது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அழகிரி வேலூரில்தங்கியுள்ளார். மாறன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தனதுஜாமீன் நிபந்தனையை தளர்த்துமாறு கோரி அழகிரி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி சொக்கலிங்கம், மாறன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் மற்றும் அதுதொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அழகிரிக்கு அனுமதி அளித்தார்.

வியாழக்கிழமை வரை அழகிரிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை முதல்வேலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை கோர்ட்டில் ஆஜர்: இதற்கிடையே, திருட்டு விசிடி வழக்கு தொடர்பாக நேற்று காலை மதுரை 5-வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் அழகிரி ஆஜரானார். அப்போது வழக்கை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஇந்திராணி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X