4 வீரப்பன் கூட்டாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ஏன் தூக்குத் தண்டனையாக மாற்றக் கூடாது என்று கேட்டு, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈரோட்டில் உள்ள அதிரடிப்படை தலைமையகத்தில் இன்று அவர் அதிரடிப்படைத் தலைவராக பதவியேற்கிறார்.
இதற்காக கோவை செல்ல சென்னை விமான நிலையம் வந்த விஜயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், வீரப்பனைப் பிடிப்பதற்கான புதிய வியூகம் அமைக்கப்படும். அந்த வியூகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. அதிரடிப்படை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யவுள்ளேன்.
அதிரடிப்படையில் சேர துடிப்பான காவலர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதிரடிப்படையில் சேர்க்கப்படுவர். நிச்சயம் வீரப்பன் பிடிபடுவான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications