முதுமலை யானைகள் முகாமுக்கு சங்கராச்சாரியார் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் யானைகளுக்கு தமிழக அரசு முதுமலையில் புத்துணர்ச்சி முகாம் நடத்தி வருவது மிகவும் நல்லது என்று காஞ்சி சங்கராச்சாயார் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில் யானைகளுக்கு முகாம் அமைத்து புத்துணர்ச்சி ஊட்டுவது மிகவும் நல்ல செயல். இந்தத் திட்டத்தால் கோவில் யானைகளுக்கு பல பலன்கள் ஏற்படும்.
இந்தத் திட்டத்தைக் குறை கூறுபவர்கள் கூறட்டும், அதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படப் போவதில்லை என்றார் சங்கராச்சாரியார்.












Click it and Unblock the Notifications