நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பம்: மாறனுக்கு அஞ்சலி
டெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
கூட்டத்தின் முதல் நாளான இன்று, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரு அவைகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன.
நாளை முதல் மீண்டும் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.
நாட்டையே கலக்கிக் கொண்டிருக்கும் போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக எதிர்க் கட்சிகள் பெரும் பிரச்சனையைக் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரன்சி மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடிக்கும் அரசுக்குச் சொந்தமான நாசிக் பிரஸ்சில் இருந்து இயந்திரங்களை வாங்கி போலி முத்திரைத் தாள்கள் அச்சடிக்கப்பட்டு ரூ. 30,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
இதில் முக்கியக் குற்றவாளியான தெல்கியை மும்பை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் சர்மா கைது செய்யாமல் பாதுகாத்து வந்துள்ள விவரம் வெளியாகியுள்ளதால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். தெல்கியும் இப்போது சிறையில் தான் உள்ளான்.
இந்த விவகாரம் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது வெடிக்கலாம்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு பிறப்பித்துள்ள உத்தரவுகள், அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஆகியவை தொடர்பாக அதிமுக, திமுக எம்.பிக்கள் இடையே மோதல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications