ஜீவஜோதியை அடைய துடித்த ராஜகோபால்: தாயார் சாட்சியம்
சென்னை:
ஜீவஜோதியை அடைவதற்காக பலவிதமான வழிகளை சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்கடைப்பிடித்ததாக ஜீவஜோதியின் தாயார் தவமணி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஜீவஜோதி பூந்தமல்லியில் உள்ள கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ளார். அவரிடம் குறுக்கு விசாரணையும் முடிந்துள்ளது.
இந் நிலையில் இன்று ஜீவஜோதியின் தாயார் தவமணி சாட்சியம் அளித்தார். அப்போது, ஜீவஜோதியை அடைவதேராஜகோபாலின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதற்காக பல்வேறு விதமான வழிகளை அவர் கையாண்டார்.அவரது ஒவ்வொரு அணுகுமுறையும் ஜீவஜோதியை அடைவதையே மையமாகக் கொண்டிருந்தது.
2001ம் ஆண்டு ஒரு நாள் நள்ளிரவில் எங்களது வீட்டுக்கு வந்து ஜீவஜோதியைத் தனக்கு கல்யாணம் செய்துவைக்குமாறு வற்புறுத்தினார், அடியாட்களுடன் வந்து மிரட்டினார்.
பின்னர் வேளச்சேரியில் உள்ள ஜீவஜோதியின் வீட்டுக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். அங்கு வைத்து ஜீவஜோதிமற்றும் அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரையும் மிரட்டினார், கலாட்டா செய்தார் என்றார் தவமணி.
அவரிடம் நாளை குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications