52 மீனவர்கள் இலங்கையிலிருந்து திரும்பினர்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களில் 52 பேர் மண்டபம் திரும்பினர். இன்னும்13 பேர் தொடர்ந்து அங்கேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 60க்கும்மேற்பட்டோர் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 52 மீனவர்கள் நேற்று மாலை மண்டபம் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் படகுகளும் திரும்பிவந்துள்ளன. இருப்பினும் இன்னும் 13 மீனவர்கள் தொடர்ந்து அங்கேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எங்கு அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தையும் தெரிவிக்க இலங்கை மறுத்துவிட்டது. இவர்கள்தான் படகுகளை ஓட்டி வந்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத மத்திய அரசைக் கண்டித்து, நேற்று நடத்துவதாகஇருந்த ரயில் மறியல் போராட்டத்தை வருகிற 20ம் தேதிக்கு தமிழக, புதுவை மீனவர்கள் நல கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது.

இந் மறியலைத் தொடர்ந்து தொடர் போராட்டங்களையும் நடத்த மீனவர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+