14 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு 8 ஆண்டு சிறை தண்டனை
சென்னை:
பெற்ற மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாயக்கும், அவரது மகளைக் கற்பழித்தவர்க்கும் தலா 8 ஆண்டுகள்சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வடபழனி பூக்காரத் தெருவைச் சேர்ந்த துணை நடிகை விஜயசாந்தி(40). கணவனை இழந்த இவருக்குஷோபா(14), கீதா(12) என்ற இரு மகள்கள் உள்ளனர். விஜயசாந்தி சூரியகுமார்(43) என்பவருடன் வாழ்ந்துவந்தார்.
இருவரும் சேர்ந்து, கணேசன் என்ற ஜோதிடரை விட்டு ஷோபாவைக் கற்பழிக்க முயற்சித்துள்ளனர். அப்போதுதப்பித்து விட்ட ஷோபாவை பின்னர் சூர்யக்குமார் கற்பழித்து விட்டார். இதன்பின் வீட்டை விட்டுத் தப்பி ஓடியஷோபா சகுந்தலா என்பவரின் உதவியுடன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் 04-08-1998 அன்று புகார்செய்தார்.
சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ் வழக்கு விசாரணை முடிவில், விஜயசாந்தி, சூர்யகுமார்ஆகிய இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கணேசனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும்விதித்து நீதிபதி விமலா வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
தொடரும் விபச்சார வேட்டை:
சென்னை விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீஸார் நெசப்பாக்கத்திலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் ரெய்டு நடத்தியதில்பானு என்பரையும் அவரது மகள்கள் நஸ்ரீன் (20), லீனா (22)வையும், நஜ்மா(19) என்ற பெண்ணையும் கைதுசெய்தனர். விசாரணையில் நஜ்மா ‘நாயுடு’ என்ற தெலுங்கு படத்திலும், நஸ்ரீன், லீனா ஆகியோர் நெப்போலியன்நடிக்கும் ‘ரிமோட்’ என்ற படத்திலும் நடித்துள்ளது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications