முதல்வர்களாக உமா பாரதி, வசுந்தரா ராஜே பதவியேற்பு
போபால் & ஜெய்ப்பூர்:
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களாக உமா பாரதி மற்றும் வசுந்தரா ராஜே சிந்தியாஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
உமா பாரதி:
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக பதவியேற்ற செல்வி உமா பாரதி பல முதல் பட்டங்களுக்குச் சொந்தக்காரர்.
மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர் இவர்தான். இந்தியாவின் முதல் சந்நியாசி முதல்வரும், மிகக் குறைந்தவயதில்(44) மத்தியப் பிரதேசத்தின் உயர்ந்த பதவியை வகிக்கப் போகிறவரும், பிற்படுத்தப்பட்டோர் அதிகளவில்வசிக்கும் மத்தியப் பிரதேசத்தில் அந்த வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வரும் இவர்தான்.
சமீப காலங்களில் நான்கில் மூன்று பங்கு பெருன்பான்மை பெற்று ஆட்சிப் பீடத்தில் அமரக் கூடிய முதல்வர் என்றபெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது. வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த லே பரேடு மைதானத்தில் துணைப்பிரதமர் அத்வானி மற்றும் மதத் தலைவர்கள் முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
வசுந்தரா ராஜே:
ராஜஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையோடு வசுந்தரா ராஜே இன்று பதவியேற்றார். அவருடன் 9பேர் அமைச்சரவையும் பதவியேற்றது.