எஸ்.டி.டி கட்டணம் 25% சதவீதம் குறைப்பு: பி.எஸ்.என்.எல் அறிவிப்பு
டெல்லி:
ஒரே தொலை தொடர்பு வட்டத்திற்குள் 100 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு சாதாரண தொலைபேசிமூலம் பேசுவதற்கான எஸ்.டி.டி கட்டணம் 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் செல்போன் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான திட்டங்களினால் மக்களிடம்சாதாரண தொலைபேசி மீதான ஆர்வம் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 17.9 லட்சம் பேர் தங்களது லேண்ட் லைன் தொலைபேசிஇணைப்புகளை சரண்டர் செய்துள்ளனர். இதனால் முந்தைய ஆண்டை விட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லாபம்இந்த ஆண்டு 76 சதவீதம் குறைந்துள்ளது.
இதனையடுத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல புதிய கட்டணசலுகைகளை அறிமுகப்படுத்திவருகிறது. முதலில் ஐ.எஸ்.டி கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டது.
இப்போது ஒரே தொலை தொடர்பு வட்டத்தில் 100 கிலோ மீட்டருக்கு அதிகமான இடங்களுக்கு தொடர்புகொள்வதற்கான எஸ்.டி.டி கட்டணம் 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பி.எஸ்.என்.எல்நிர்வாக இயக்குனர் ப்ரிதிபால் சிங் டெல்லியில் அறிவித்தார்.
இதன்மூலம் இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.20 பைசாவாக இருந்த எஸ்.டி.டி கட்டணம் இனி ரூ.1.80 பைசாவாககுறையும். வரும் 15ம் தேதி முதல் இந்த கட்டண சலுகை நாடு முழுவதும் அமலாகும்.
இந் நிலையில் தமிழகத்தில் சாதாரண தொலைபேசிச் சேவை அளித்து வரும் டச்டெல் என்ற தனியார் நிறுவனமும்இதே கட்டணச் சலுகையை அமல் செய்யும் என்று அந் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.