For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு தரப்பில் ஆஜராக பிரபல கர்நாடக வழக்கறிஞர் மறுப்பு: ஜெவுக்கு வாதாட விருப்பம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராக பிரபலகிரிமினல் வழக்கறிஞர் நாகேஷ் மறுத்துள்ளார். அதே நேரத்தில் ஜெயலலிதா சார்பில் வாதாட விருப்பம்தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில்நடக்கவுள்ளது.

பெங்களூரில் எந்த இடத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக முடிவு எடுப்பதில் கர்நாடக அரசுகுழம்பித் தவித்து வருகிறது. மத்திய சிறை வளாகம், சிவில் நீதிமன்ற வளாகம் என மாற்றி, மாற்றி தனது முடிவைஅறிவித்து வந்த கர்நாடக அரசு இப்போது மீண்டும் மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைப்போம்என்று கூறியுள்ளது.

ஆனால், இதுவும் இறுதியான முடிவல்ல. இதனால் மீண்டும் இடம் மாறலாம் என்று தெரிகிறது.

இந்தக் குழப்பமே தீராத நிலையில் யாரை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிப்பது என்ற குழப்பமும் கர்நாடகஅரசை பிடித்து ஆட்டுகிறது. மாநிலத்தின் பிரபல வழக்கறிஞர்களை அரசு அணுகி வருகிறது. அவ்வாறுஅணுகப்பட்டவர்களில் ஒருவர் நாகேஷ்.

இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா மீதான பல கோடி கம்ப்யூட்டர் ஊழல் வழக்கில் அவருக்குஆதரவாக வாதாடி வெற்றி தேடித் தந்தவர்.

இவரை ஜெயலலிதாவிற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞராக வாதாடுமாறு கர்நாடக அரசு கோரியது. ஆனால்,இதற்கு நாகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வந்தால்,அவருக்காக வாதாடத் தயார் என்று அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X