மகாராஷ்டிரத்தில் கொத்தடிமைகளாக இருந்த மதுரையைச் சேர்ந்த 15 பேர் மீட்பு
மதுரை:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த மதுரையைச் சேர்ந்த 16 பேரை தமிழகபோலீஸார் மீட்டு வந்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த 16 பேர் மகாராஷ்டிர மாநிலம் நல்கொண்டா என்ற ஊரில் உள்ள உணவு பதப்படுத்தும்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அங்கு 16 பேரும் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
சரியான உணவு தரப்படுவதில்லை, அதிக நேரம் வேலை பார்க்க பணிக்கப்பட்டனர். பசியால் வேலை பார்க்கமறுத்தால், அவர்கள் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றுவது, இரும்புக் கம்பியால் சூடு போடுவது எனகொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர்.
இந் நிலையில் அவர்களிடமிருந்து காளிமுத்து என்பவர் தப்பி வந்து மதுரை போலீஸில் தகவல் கொடுத்தார்.அவரது புகாரின் பேரில், மதுரையிலிருந்து போலீஸ் தனிப்படை நல்கொண்டா விரைந்தது.
மகாராஷ்டிர போலீஸாரின் உதவியுடன் 15 பேரையும் மதுரை போலீஸார் மீட்டனர். மேலும், அந்த நிறுவனத்தின்உமையாளர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணைக்காக அவரையும் போலீஸார் அழைத்துவந்துள்ளனர்.