சென்னை தப்பியது, ஆந்திராவை நோக்கி நகர்ந்தது புயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மற்றும் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களை அச்சுறுத்திய புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டது. இதனால் கன மழையுடன் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் தப்பின.

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் இன்று இரவு சென்னை மற்றும் வடக்குக் கடலோர மாவட்டங்களில்கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் சென்னைக்கு தெற்கே 300 கிலோமீட்டரில்மையம் கொண்டிருந்த புயல் தற்போது ஆந்திர மாநிலம் ஓங்கோலுக்கு 300 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்துவிட்டது.

இதனால் சென்னைக்கு புயல் அபாயம் நீங்கியுள்ளது. இந்தப் புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்,மசூலிப்பட்டனத்திற்கும் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை காலைக்குள் கரையைக் கடக்கும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் நிலவும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் நகர்ந்து வருவதையொட்டி சென்னை நகரில் நேற்று பிற்பகல் முதல் நல்ல மழை பெய்து வருகிறது.இன்றும் மழை நீடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+