நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் வைகோ மனு மீது இன்று தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத்தில் இன்று நடக்கவுள்ள பொடா சட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரிமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

நேற்று அரசுத் தரப்பு மிகவும் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததால் இந்த வழக்கில் தீர்ப்பு தாமதமாகியுள்ளது.

பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்றும்நாளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி பொடாநீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை மாலை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வைகோ உடனே மேல் முறையீடு செய்தார். இது அவசர மனு என்பதால்விடுமுறை தினமான சனிக்கிழமையே வழக்கை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். அப்போது பொடா சட்டத்தின் மீதுதிங்கள்கிழமை விவாதம் நடக்கப் போவதில்லை என அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

இதனால் இதை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை என அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து வைகோவின் மனுவுக்கு நேற்றைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகுலசேகரன் உத்தரவிட்டார். தீர்ப்பை திங்கள்கிழமை வழங்குவதாகக் கூறினார். அதே நேரத்தில் அவசரம்ஏற்பட்டால் இரு தரப்பினரும் வீட்டில் வந்து முறையிடலாம் என்றும் அவர் கூறியிருந்தார்

இந் நிலையில் பொடா சட்ட மசோதா மீது திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதம்நடக்கும் என மத்திய அரசு அறிவித்தது.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வைகோவுக்கு அனுப்பிய கடிதத்தின்நகலைக் காட்டி வைகோ மனுவை அவசரமாக விசாரிக்குமாறு நீதிபதி வீட்டிற்குச் சென்று மதிமுக வழக்கறிஞர்கள்முறையிட்டனர்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரனிடம் சென்று பதில் மனுவை வாங்கிவருமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து மதிமுக வழக்கறிஞர்கள் என்.ஆர்.சந்திரனின் வீட்டிற்குச் சென்று நீதிபதியின் உத்தரவைதெரிவித்தனர். அதற்கு அவரும் பதில் மனுவை விரைவில் தாக்கல் செய்வதாக பதில் கூறினார்.

ஆனால், நேற்று மாலை வரை அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று இரவு தான் அரசின் பதில் மனுநீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பொடா சட்டத்தின் கீழ் மனுதாரர் சிறையில் உள்ளார். எனவே அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது. வைகோ எம்.பி. என்பதால் அவருக்கு விசேஷ சலுகைகள் வழங்க முடியாது. மற்றகைதிகளுக்கு என்ன சலுகைகள் உள்ளதோ அதுதான் வைகோவுக்கும் வழங்க முடியும்.

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பின்பே வைகோ வெளியில் செல்ல முடியும். டெல்லிக்கு செல்லபொடா நீதிமன்றம் அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து வைகோ அங்கேயே மேல் முறையீடு செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தில் தனி மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தலிலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் வைகோ கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதைஇப்போது முன்னுதாரணமாக கொள்ள முடியாது. அது ஒரு சலுகை. அதை எப்போதும் எதிர்பார்க்க முடியாது.எனவே வைகோவை டெல்லி செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று காலை நடக்கிறது. தீர்ப்பும் காலையே வழங்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.அப்போது வைகோ டெல்லி செல்ல முடியுமா இல்லையா என்பது குறித்துத் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+