பள்ளிக் கூரை இடிந்து 60 மாணவர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் பகுதியில், நடுநிலைப் பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்60 மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர்.
பாவூர் சத்திரம் பகுதியில் நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் தற்போது அரையாண்டு தேர்வுநடந்து வருகிறது. மொத்தம் 80 மாணவ, மாணவியர் இதில் படிக்கின்றனர்.
இன்று காலை தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் பள்ளியின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் 60மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர். அதில் 10 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications