பாளை. சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவர் கைது
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து கடந்த சனிக்கிழமை 6 கைதிகள் சுரங்கப் பாதை அமைத்துத் தப்பினர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், 3 கைதிகள் உடனடியாக பிடிபட்டனர். இவர்களில் சிவக்குமார்என்பவர் மின்வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பலியானார்.
பின்னர் திங்கள்கிழமை மூர்த்தி என்பவர் சுத்தமல்லி கிராமத்தில் வைத்து பிடிபட்டார். இந் நிலையில் தூத்துக்குடிமாவட்டம் நாசரேத் பகுதியில் சாம்ராஜ் என்ற இன்னொரு கைதி சிக்கினார்.
இவர்தான் கைதிகள் தப்புவதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்து, தலைவர் போல செயல்பட்டவர் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர். இவர் ஒரு ஆயுள்தண்டனைக் கைதி ஆவார்.
தப்பியவர்களில் சார்லஸ் என்பவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரும் விரைவில் பிடிபடுவார்என்று நெல்லை போலீஸார் தெரிவித்துள்ளனர்.