For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மதுக் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் டாஸ்மார்க் நிறுவனம் நடத்தி வரும் மதுக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள்,மேற்பார்வையாளர்களுக்கு சம்பள உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் மதுக் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசு தனது டாஸ்மார்க்நிறுவனம் மூலம் மதுக் கடைகளை நடத்தி வருகிறது. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்தக்கடைகளுக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் கூட, வசூலில் சக்கை போடு போடுகிறது டாஸ்மார்க் மதுக் கடைகள்.

இந் நிலையில் இதில் வேலை பார்க்கும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு சம்பள உயர்வை அரசுஅறிவித்துள்ளது. தற்போது விற்பனையாளர்களுக்கு மாதம் ரூ. 1000 ஊதியம் வழங்கப்படுகிறது, இது வருகிறஜனவரி 1ம் தேதி முதல் ரூ.2000 ஆக உயர்த்தப்படுகிறது.

அதேபோல, மேற்பார்வையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 2000 சம்பளம் ஜனவரி 1ம் தேதிமுதல் ரூ. 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விற்பனை செய்யும் கடைகளின் ஊழியர்களுக்குத் தொடர்ந்துஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X