நேர்காணலை முன் கூட்டியே முடிக்கிறார் ஜெ
சென்னை:
சென்னை அருகே கொளப்பாக்கம் என்ற கிராமத்தில் நடந்து வரும் அதிமுக செயல்வீரர் ஆலோசனைக் கூட்டம்திட்டமிடதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கட்சி வளர்ச்சி, தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்துஆலோசனை நடத்தி வருகிறார் ஜெயலலிதா. இந் நிகழ்ச்சியின்போது கட்சி நிர்வாகிகளையும் முதல்வர் ஜெயலலிதாதேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந் நிகழ்ச்சியை நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் அடுத்தஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதையடுத்து தனது செயல்வீரர் ஆலோசனைக் கூட்டத்தை விரைவாக முடிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து ஜனவரி 31ம் தேதியுடன் கூட்டம் முடிவடைவதாக அவர் அறிவித்துள்ளார். தற்போது 15மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஜெயலலிதா பேசி முடித்துள்ளார். எஞ்சிய மாவட்ட நிர்வாகிகளுடன் 31ம்தேதிக்குள் பேசவுள்ளார்.












Click it and Unblock the Notifications