ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கனோர் பலி?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்:

தென்கிழக்கு ஈரானில் பாம் என்ற நகரில் இன்று காலை மிக பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதில் அந் நகரின்60 சதவீத வீடுகள் இடிந்ததுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இன்று காலை மக்கள் எல்லோரும் தூக்கத்தில் இருந்தபோது இந்த நிலநடுக்கம் நேர்ந்தது. ரிக்டர் அளவுகோலில்6.3 என பதிவாகிய இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.28 மணிக்கு நிகழ்ந்தது.

இது குறித்து கெர்மன் மாகாண ஆளுநர் மொகம்மது அலி கரிமி தெரிவிக்கையில், நிலநடுக்கத்தில்பலியானவர்களின் எண்ணிக்கை குறித்தோ, சேத மதிப்பு குறித்தோ இன்னும் முழுமையான தகவல்கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி முழுவீச்சில்நடந்து வருகிறது என்றார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாம் நகரம் ஈரான் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இன்று நிகழ்ந்தநிலநடுக்கத்தில் நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. தொலைபேசி இணைப்புகள்செயலிழந்தன.

ஈரானில் நிலநடுக்கம் ஏற்படுவது சகஜம் என்றாலும், 1998ம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் சக்திவாய்ந்தது இன்றைய நிலநடுக்கமாகும். 1991ம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட 1,000 நிலநடுக்கங்களில்17,600 பேர் இறந்தும், 56,000 பேர் படுகாயமுற்றும் உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+