For Daily Alerts
Just In
மதுரை பேராசிரியை வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை
மதுரை:
மதுரை தனியார் கல்லூரிப் பேராசிரியை வீட்டில் கதவை உடைத்து 125 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரை அண்ணா நகர் எல்.ஐ.சி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினத்தன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
இந் நிலையில் ஊர் திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார்.
மொத்தம் 125 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, December 27, 2003, 5:30 [IST]